Tuesday 2 October 2012





வானம் எனும் 

நீல பொய்கையிலே 

இயற்கை மங்கை குழல் 

விரித்து நீராடி

நெருஞ்சிமுள்

பூப்போல நட்சத்திர

பூச்சூடும்

பொன்னிரவில்

தனை மறந்து

வீழ்ந்து கிடக்கும்

ஒரு

பாதி சூரியன்


" சிறுகுழந்தை "


நீ ஊட்டும் பால் சோற்றை விட 
நீ பேசும் 
பாச 
வார்த்தைகள் 
என் பசியை 
போக்குகிறது .....

தாய் ஒருவள்
இல்லை என்றால்
காற்றும் கூட
இளைப்பாற
இடமிருக்காது
பூமியில் ........

என்னுள் ஏக்கம்
ஊற்றெடுக்கின்றது
பெண்ணாய்
பிறக்கவில்லையே
என்று .....
தாய்மை
அடைய
வழி
இல்லையே
என்று ...........
நீ விழித்து 
இருந்தநேரம் கூட 
எங்கள் 
இல்லத்தில்
குறைந்தது இல்லை
சிரிப்பு சத்தம் ......


வார இறுதி தமிழுக்காக
காலை முதல் இடம் பிடித்த
வீட்டு திண்ணை
மறந்து போனோம் ...


தமிழுடனே பயணிக்க
வேர்கடலை படகேறி
பயணம் தொடர்ந்து
வெற்றி கண்ட
நிமிடங்கள்
மறந்து போனோம் ........

சண்ட வந்து பிரிஞ்ச
போதும் அந்த தமிழ் காண
கூட்டுசேரும்
நண்பர்களை
கண்களிலே மறந்து போனோம் .......


கலர் கலரா கனவில்
வரும் அன்று பார்த்த
"வெள்ளை படம் "


கூடி இருந்து பார்த்த படம்
மறந்து போகும்
போனாலும்
பார்த்த நொடி பசுமையிலே
காலமெல்லாம்
செழித்திருக்கும் .....


தேர்ந்த சில நிகழ்ச்சியினை
பண்டிகையில் கண்டு விட்டால்
திரண்டு வரும் வெள்ளம்
போல ஊற்றெடுக்கும்
உற்சாகம்.....


அம்மா கையில் நெய் முறுக்கு
வாங்கிதின்ன போர் தொடுப்போம்
அப்பா வந்து மிரட்டயிலே
முந்தானை கவசமேர்ப்போம் ...


தமிழ் இல்லா நேரம் எல்லாம்
தன் பழைய கதை சொல்லும் போது
அப்பா விடும் பெருமூச்சு
கூடி நிற்கும் துன்பம் எல்லாம்
தூரபோகும் தூசாக .....

அன்று வாரி அணைக்க காலன் வந்தாலும்
விரட்டி அடிக்க சொந்தம் உண்டு


அன்று எந்த துன்பம் வந்த போதும்
சொல்லி அழ அன்னை மடி கண்டோம்
ஆற்றுதல் பெற தந்தை தோள் கொண்டோம் .....


இன்று சொல்லி அழ தாய் இல்லை
அவள் சேர்ந்துவிட்டால் கற்பனை "காவிரி " யின்
இறுதிசடங்கில் ...... சம்பளம் இல்லா துணை நடிகையாக



தோள் தேட தந்தை இல்லை அவர்
இறங்கிவிட்டார் சுரணை இல்லா
அரசியல் பேச்சு தொகுப்புகளில்


தாத்தாவின் கண்ணாடி மறைத்து
களவு பழக நேரம் இல்லை குழந்தைக்கு
கை கொடுக்க காத்து
இருக்கிறான் குழந்தை பீமன்


இரண்டு வண்ணம்
நீ கொடுத்த போதும்
அன்பு வண்ணம்
மாறாமல் சொந்தம்
கொண்ட குடும்பம்
எல்லாம்
இன்று
நோய் வந்த
கோழி போலே
முடங்கி கிடக்கு
வீட்டுக்குள்ளே ....


வீட்டுக்குள்ளே அன்பும் இல்லே
நெஞ்சுக்குள்ளே பாசம் இல்லே
அரவணைக்க ஆளும் இல்லே
அரிதாரம் பூசிய
வானரங்கள் கூத்தடிக்க

பலவண்ணம் நீ கொடுத்த
போதும்
வாழ்வின் வண்ணம்
நிலைக்களையே ....

வண்ணம் எல்லாம்
மாறிபோச்சு அதோட
வாழ்க சேர்ந்து
வாடிபோச்சு
சேர்த்து வெச்ச
பாசம் எல்லாம்
கனவினிலே
கரஞ்சுபோச்சு



கூடி வாழ்ந்த காலம்
எல்லாம் நிகழ்
காலத்துல
நிழலாக
மாறிடவே ,

மாறிவிட்ட காலத்துல
தாரத்தை இன்னொருவனுக்கு
மணமுடிக்கும் மணவாளன் ....


தன் தாய்க்கு
மனம் செய்து வைக்கும்
பாக்கியவான்கள்
பிள்ளைகள் .....

நெஞ்செங்கும்
விஷம் பரப்பும்
நோய்கிருமி
வாழுமிடம்
"வண்ண தொலைகாட்சிபெட்டி"

இரண்டு வண்ணம் தந்த போதும்
அன்பு மொழி உடனே
தென்றலெனும் புதுமை
வந்து கதவு திறக்க
வழி தந்த முதல் முற்றம்
"கருப்பு வெள்ளை தொலைகாட்சிபெட்டி "



அன்பானவர்களின் 
மௌனம் 
மனதை 
உறுத்தும் 
விதைகளை
விதைத்து
விடுகிறது......


என்ன காரணத்தினாலோ
இந்த
விதைகள்
மட்டும்
விதைத்ததுடன்
விருட்சமாகி
உயிர்போக்கும்
வீரியத்தை
மனதில்
வேரூன்ற
செய்கின்றது ...........




சிதை
கொண்ட
நெருப்பை போல
விட்டு விட்டு
புகைகிறது
என்னுள்
"தனிமை நெருப்பு "


உன் 
தேன்கனி 
இதழ்களில் 
பாட்டு 
எழுதி 
பழகிடவே


கம்பன்
தமிழில்
வார்த்தைகள்
தேடுகின்றேன்


வந்து
விழுவது
என்னவோ
"மனோ "வின்
வார்த்தைகளாகவே
இருக்கின்றது ......


கண்டம் பிரிக்கும்
ரேகை
தான்
கடக ரேகையாம்

உன் இதழ்
பிரியும்
இடைவெளி
ரேகையில்
பிரிக்க படுகிறது
என் சுக
துக்கங்கள் ..............
















கோடி
சொந்தம்
சேரும்
போதும்


காதல்
வந்து
சாமரம்
வீசும்
போதும்

உண்மை நட்பு
இல்லாதவன்
வாழ்வு

நீர்நடுவே
வாழ்வமைந்தும்
தாகம் தீராத
பறவை
போல
முடியாத
தாகத்துடன்
வாழ்விழந்து மரணிக்கும் ..........................

Saturday 22 September 2012



உன் துன்பத்தை எதிர்கொள்ள நான் இருக்கிறேன்,

உன் களம் வெல்ல நான் இருக்கிறேன், 


உன் லட்சியம் வெல்ல நான் இருக்கிறேன்,


உன் பகை வெல்ல நான் இருக்கிறேன்,


உன் வாழ்வு செழிக்க நான் இருக்கிறேன் ,



என் வழி செல்லும் பாதசாரியாக 


மட்டும் நீ 


இரு 


வெற்றி உன் 


பின்னால் வரும்

இப்படிக்கு

உழைப்பு ........
 

Monday 6 August 2012




படச்சவந்தான் எவனுமில்ல
வாழ வழி காட்டியதும் எவனுமில்ல

திறந்து கிடக்கும் வானத்திலே
சிறு மேகம் நான்தானே ........

பூட்டி வைக்காத பூமியிலே
புது மலரும் நான்தானே .......

காத்து கூட பேசிக்கிட்டே
மனம் மயங்குற பயநானே .......

வெள்ளாம வெலஞ்சதுனா
மைனர் கூட நான்தானே .....

சின்ன பொட்டிக்குள்ள காத்து  போல
என் நெஞ்சுக்குள்ள சேர்ந்து நிக்கும்
நியாபகம் எல்லாம் வெற்றிடந்தான் .......

இந்த பூமி ஏய்க்காது
வானமது பொய்க்காது

என் ஒடம்பு விழுந்துச்சுன்னா
ஆறடி நிலம் போதும்....

கண்ணீர் மடை தொறக்க
காக்கா குருவி கூட்டம் இருக்கு.....,


என் சாவு வரும் போது
நான் குளிப்பேன் பன்னீரில ........

என் சந்ததி வருத்தப்பட
நான் இல்ல காரணமா .........

பெரும்பொலப்பு பொழைக்க வைக்க
நான் சேர்த்த தேவை இல்ல வெறும் பணத்த....

நான் போன பின்னாடி எவன் எப்படி
இருப்பானோ தெரியாது .....

அவன் வாழ வழி இருந்தா
பொழைக்கட்டும் பூமியிலே ..........

வந்த வழி மறந்துபோக
நன்றிகெட்ட மனுசனும் நான் இல்ல ..........

தப்பு செய்ய வெச்சு தண்டிக்கிற
இல்லாத கடவுளும் நான் இல்ல ..................!

மொதல் மண்ணுமேல வந்து விழுந்த
சிறு பூச்சி நாந்தானே .............!








சாலைஓரம்
கடை விரித்து
வயிறு எங்கும்
பசி நிறைத்து
உம்மை நம்பி
வாழ்கிறோம் நாங்கள் ......


சொந்த வீட்டு சொந்தங்கள்
மீது பற்று இல்லாமல்
அயல்நாட்டு முதலையின்
வாயில் விழுகின்றீர் ............


உன் பணத்தை
உறிஞ்சி கொண்டு
உன் வாழ்வை வாழ்ந்து கொண்டு
அவன் உனக்கு
கொடுப்பதென்னவோ
நோய்களை மட்டும் தான் ......



நுரையீரல் இளைப்பாற
கல்லீரல் கலையாக
இதயம் சீராக
சிறுநீரகம் புதிதாக
ரத்தம் சூடாக

உன் வீட்டு முற்றத்தில்
ஆயிரம் மூலிகைகள்
ஆயிரம் நல்வினைகள்

கண்திறந்து பாரப்பா
என் வயிறும் நிறையும்
உன் வாழ்வும் செழிக்கும் ..........!


Friday 3 August 2012




சேற்று வயல் நாற்று நாடும்

சிருங்குருத்தே உன் பாதம் பட்ட

நிலம் எல்லாம் சீர் நிறையும்

இன்றையபொழுதின் நம்பிக்கை நீயே

நாளைய உலகின் பசி ஆற்றுபவன் நீயே ...........





Wednesday 1 August 2012




முற்றத்து முடிவினிலே
தொட்டு செல்லும் தென்றல் காற்று,

வாழ்வியல் வர்ணங்களில்
வந்தொளிரும்  வெண்ணிலவு,

குழந்தை கிறுக்கல் ஓவியங்களாய்
வெண்மை பூத்த மேகங்கள்,

விட்டம் பார்க்கும் முதுகிழவன்
பெரும் வயிறாய் நிமிர்ந்து நிற்கும்
மலைகள்,

படுத்து உறங்க
குஞ்சுகளுக்கு
பட்சிகள் பாடும் தாலாட்டு,

நாளைய விருந்தினன் வண்டிற்காக
தேன் சேர்க்கும் நறுமலர்கள்,

முட்டத்து வீட்டு முதிர்கன்னியாய்
முதுகு வளைந்து நிற்கும்
வாழைமரம்,

தலை விரித்து கூத்தாடும்
பச்சைமர  பருவமங்கைகள் ,

தொட்டு தொடரும்
சிங்கார சில்வண்டுகள்,

ஊர்க்கதை பேசி எக்காளமிடும்
உறவுகள்,

வாய்மொழியின் வாசலிலே
உலக தத்துவம் குடிகொள்ளும் சில
மங்கையர் மௌனம்,

எந்தன் மடியில் தவழ்ந்த
வாழ்வியல் வசந்தம்
என் நாளைய தலைமுறை
ஸ்பரிசம் தீண்டுமா?????

காதுமடல் சிலிர்க்கும்
அன்னைமடி கனவுகளுக்கு

கதவு திறக்குமா
நாகரீக நிமிடங்கள் ????????




Monday 9 July 2012




இரவென்று விடியும் என்று

விளிமருகும் கண்களே,

கனவென்று பலிக்கும் என்று நிஜத்தில்

எறியும் விழிகளே,

தனக்கு இரவென்றும் விடியாது என்றுதெரிந்தும்

முதுகில் நம்பிக்கை விளக்கை எரியவிட்டு பகலாக்கும் மின்மினி

பூச்சியின் காலடியில் தவம் கிடப்போம்

குலம் வீழ்ந்த இடம் சகதி என்று தெரிந்தும் சகதியின்

கருவறையில் காலூன்றி சுகந்தம் பரப்பும்

தாமரையின் நீர் பருகுவோம் .............

உனக்கு சிரம் தாளாத கனவுகளை

நம்பிக்கை கூண்டில் நிற்க வைத்து வெற்றி கொள்வோம் ..........



Friday 6 July 2012




கண்ணெதிரே கருவருத்தால் கண்மூடும் குருடர்கள்,

உருளை கல் கண்டால் பொட்டு வைத்து பூ முடிப்பர் ....


இவர் உடுத்த கோவணம் இல்லை

கற்பனைக்கு பட்டுடுத்தி பூரிக்கின்றார் ..............


காவிகண்ட இடத்தில் எல்லாம் இவன் கன்னத்தை கலவரபடுத்தி

அதை பக்தி என்கிறான் ....


ஊண் இன்றி  வீதியில் உலவும் மனிதனை விடுத்து தொந்தி நிரப்பி

புண்ணியத்தை வசபடுத்த அலைபவனை அரவணைக்கிறான் ...........


அற்ப காக்கை கூட கூடி வாழ்ந்து சிறகடிக்கும் போது ...

ஆறறிவு அக்றிணை

மட்டும்

சுயநல சேற்றில் சிக்கி

உழல்வது ஏன் ????







Saturday 30 June 2012




எனக்கும் உண்டு பேராசை .........


தலை நரைக்காத காற்று,

திரை விலக்காத வானம்,

மலை பொய்க்காத மேகம்,

விதை கெடுக்காத பூமி,

அமிலம் தீண்டாத நீர்,

புனிதம் தொலைக்காத மனிதம்,

கலப்பு இல்லாத தமிழ்,

கனவு தொலையாத உறக்கம்,

பருவம் தொலைக்காத காதல்,

நம்பிக்கை தேயாத  நட்பு,

அழுகை தீண்டாத தாய்மை,

திறமை  குலையாத தொழில்,

குணம் கெடுக்காத செல்வம்,

சுயம் தொலைக்காத கொள்கை,

கொடுக்கும் கை தாளாத தானம் ,

பிறவி காணாத புது உலகம்,

தன்னிலை மறவாத தமிழர் மானம்.



யாவும் கண்டபின்,

உலகின் மக்களுக்கும், இயற்கைக்கும் ,

தார்மீக சொந்தமாக மாற வேண்டும் .

ஆனபின்,

விழிமூடி நல்லுலகம் சேர வேண்டும் ,

பிறர் எனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் ,

பிறந்து வந்த நற்பயனை அடைய வேண்டும் .............!







கண்ணெதிரே

பல பொழுதுகள் விடிந்தபோதும்

எங்கள் வாழ்வில் மட்டும்

விடிவெள்ளி முளைக்கவே இல்லை ........

இருந்தும் சில நிமிடங்கள்

எங்கள் மனதை சமாதனம்

செய்ய எங்கள் உதடுகள் சிந்தும்

ஒரு அமுத துளி இந்த

"புன்னகை"

Thursday 28 June 2012




நல்லோர் தேடும் புது உலகம் அது

சுயநலமில்லா தனி உலகம்

பிறர் நலம் பேணும் பொன் உலகம்

இருளில் ஒளி ஏற்றும் திறனுலகம்

அதிகாரம் ஒலித்து அஹிம்சை வளர்க்கும் அன்பு உலகம்

படைப்போம் நல்வாழ்வு வாழ்வோம் 

நிம்மதியாக ........... மகிழ்ச்சியாக .......!

Wednesday 27 June 2012





கனவுகளை களவாடும் காதல்.....

வற்றிய குளங்களை கணக்கெடுத்து கண்ணீரால் நிரப்பும் காதல் .......

உள்ளத்து உணர்வுகளை உருவாக்கும் காதல் ....

உருவாக்கிய உணர்வுகளை மெருகேற்றும் காதல் .....

இல்லாத இறை அருளாய் நினைக்கதோன்றும் காதல் ...........

வந்து ஊடுருவியபின் சுவடுகளை அளிக்க முடியாதது காதல் ..........!




Thursday 21 June 2012







புழுவிற்குள் முதுகெலும்பை என் கவிதை படைக்க துணை நிற்பவன்,.......


கவிஞனுக்கு என்று உலகம் பூசிய அரிதாரம் களைந்து நீருக்கு நெருப்பை ஆடையாய் அணிவிக்கும் புது பாதை கண்டவன் .......

ராகம் பாடி வந்த குயில்களை கூட அதர்மத்தை எதிர்க்கும் வல்லூருகளாய் மாற்றும் சூட்சமம் அறிந்தவன் ......

சுதந்திர தாகம் நெஞ்சடைத்த வேளையிலே ஆணிவேர்வரை பாயும் தமிழ் அமுதமென பொழிந்தவன் ..............!


தெருக்கவிதை படைத்து வந்த என் பேனா அவன் தமிழ் என்னும் அமுது பருகி இன்று தீஜுவாலையாய் ஒளிர காண்கிறேன் .....

காதலில் மையல் கொண்ட வார்த்தைகள் யாவும் அவன் கோவகனலில்
பொசுங்கி சாம்பல் ஆக காண்கிறேன் .....



கவிதைக்குள் கனல்நிரப்பி நாடெங்கும் பரப்பிய பெருந்தகையான் கடந்திட்ட 
தமிழ் கடல் கடக்க எவருமில்லை .......... 



சுயநலத்தில் சிறை பட்ட மனிதர்மனம் மாற்றிடவும் எவரும் இல்லை ....


என் தீராத தாகம் தன்னை தீர்த்து வைக்க பாரதி எனும் சூரிய பறவை நீர்

கொணரும் கவலை இல்லை .........





தமிழ் தந்த தலைமகனை வணங்கி விடை பெறுவோம் ............!


















அந்திக்கு

பந்தி வைக்க

சந்தம் சமைத்த

வானமகள்

எடுத்து வைத்த

முதல் பொரியல் '

சூரியனின்

"சிவப்பு கீற்றுகள்" ................!



Tuesday 19 June 2012




தமிழது படரும் இடமெல்லாம் சிந்தனை கொள்ளும் உள்ளம் போல

காற்று தீண்டிய இடமெல்லாம் மலரும் காதல் சோலை .........


கவிபடைக்க காற்று கிளம்பினால் முதல் வரியாய்

அவள் பெயரை முத்தாய்பாய் எழுதிடுமே ......


தமிழ் கொடுத்த வார்த்தை எல்லாம் அவள் பெயராய் தோன்றிடுதே ????


தமிழ் படைத்த புலவன் அவன் மனக்கண் முன்னே தோன்றி

கவர்ந்திருப்பளோ ????


மதனவன் கண்ணயர்ந்த காரணத்தால் பிரம்மன் கொடுத்த தண்டனையால்

கன்னியவள் கண்களுக்குள் சிறை கண்டான் ......



வறியவர் காசு கண்டால் மயங்குதல் போலே அவள்விழி கண்டால் 


ம்யங்கிடுதே இந்த வாலிபன் மனமும் ......



தன்னிலை அறியா கனவுகளுக்குள் சிறைபட வேண்டுமாயின் 

அனைவரும் காதல் கொள்வீர் .................




நீர் உயர்திணை என்பதை மனமது மறந்தால் காதலே அனைவரையும்

கொல்லும் ............





Thursday 31 May 2012




கண்கள்

தூங்கியும்

தூங்கவில்லை

குழந்தையின்

" மனக் கண்கள் "

தந்தையின்

மரணத்திற்கு

பின்

ஈழத்தில் !



பாதை

தொடங்கும்

முன்னே

முடிகிறது

தாயின்

கருவறையில்

குழந்தையின்

பயணம் !















நிலவின் மடியில்

குளிரின் அணைப்பில்

குயில்களின் தாலாட்டில்

உறங்கும் போது

இறப்பேன் என்றால்

மீண்டு(ம்) பிறப்பேன்

அவ்வாறே மறுபடி மரிக்க ........!




மந்தையில்

ஆடும் கூட

ராகம்

பாடியது

அவளது

வளர்ப்பால்,,,,,,,!


உலகின்
ஓசை
எழுமுன்
எழுந்து

உலகின்
ஓசை
அடங்கியபின்
உறங்குவதுதானோ
காதல் ?????

உயிர் மையை
கரைத்து
மெய்யை
வரையும்
ஓவியன்
தானோ காதல் ???


துடிக்கும்
இதயம்
அறுத்து
மற்றவருக்கு
கொடுக்கும்
மருத்துவன்
தானோ காதல் ????


இல்லை, இல்லை, இல்லை



அன்பின்
உன்னதம்
அறிந்து
மனதை
பக்குவபடுத்தும்
"தாய்மை "
உள்ளமே காதல்




சின்ன விழி பார்வையினால் என் உயிரை நீ எடுத்தாய்...

கள்ளசாவி போடாமல் என் இதயகூட்டை நீ திறந்தாய் ....

வெள்ளந்தி மனசாலே நீ என்னை பதியமிட்டாய் ....

சித்திரை சூரியனை மார்கழி நிலவாய் குளிர வைத்தாய் ....

வெண்ணிலவின் வியர்வையிலே சூரியனும் மூழ்குதடி ....

உன் மனக்கதவை நீ திறந்தால் மீண்டு(ம்) வருவேன் உன்னை பார்க்க ...

தேவதையின் சிறகுகளில் ஒட்டிக்கொள்ளும் துகளாணேன்
விண்ணுலகம் தேடி செல்ல அல்ல,  உன் கண்ணுலகம் காண்பதற்கு .....

கோகுலத்து ராதையினை நானும் கண்டதில்லை உன் சிரிப்பழகை கண்டபின்னே அக்கவலை எனக்கு இல்லை...

விண்ணவரின் தேவதையே, மண்ணுலகின் வான்மதியே,
உன் பௌர்ணமியை நான் காண என்ன தவம் செய்யவேண்டும் ????

பூக்களின் மகரந்தமாய் பறந்து வரும் என் மனதை காற்றாய் மாறி திசைமற்றுவதும் ஏனடியோ ?????

கார்முகிலின் நீர்த்துளியாய் வந்தவளே என்மனதை ஒரு முறைதான் பாரடியோ !!!!!

சந்திரனின் தேய்பிறையாய் கரைந்தேனே

உன் சம்மதத்தை எதிர்நோக்கி நின்றேனே .....

பட்டமரம் துளிர்விடத்தான் ஒரு வார்த்தை சொல்லடியே ............!









விதவையின் காதலன் கண்ணீராக ..........

சுட்டுவிரல் ரேக தேய அவ சுண்ணாம்பு தடவி தந்த வெத்தல தான் செவ்வானம செவந்திடுமே ......

பொட்டளிக்க நிக்குறாலே சூரியனும் அழுகுதம்மா .....

பூத்த பூவு விரியுமுன்னே கருகித்தான் போனதம்மா ......

அள்ளிவெச்ச குங்குமமும் கரஞ்சு தான்   போகுதம்மா ....

தங்கமா வளந்தவதான் கலையிழந்து போனாளே ....

நிதமும் கொலசாமி கும்புட்டு கொலவிகல்லா ஆனாலே ....

நினைச்சபடி நடந்திருந்தா நல்ல வாழ்க்க வாழ்ந்திருப்பா ....

ஊரான் சொல்கேட்டு வீணாதான் போனாலே .....

உன் ராவில் விளக்கேத்த விடிவெள்ளியா நன் இருக்கேன்

ஊரத்தான் நம்பாதே வெறும்பேச்சு பேசிடுமே .......

உன் வாழ்க்க உன் கையில், நீ நல்லதொரு முடிவெடுத்தா போதுமடி

உன் விரல நான் புடிச்சு வாழ்வாங்கு வாழ்வேனடி .........!






கார்முகிலே கார்முகிலே என்னவளை கண்டாயோ ???

பிள்ளைத்தமிழ் பேசிடும் என் மயிலிறகை கண்டாயோ ???

கொங்கு நாட்டின் திருமகளாய் பிறந்தவளை கண்டாயோ ???

பகலிலும் விழித்திருக்கும் என் பால்நிலவை கண்டாயோ ???


சூரியனே, சூரியனே என்னவளை கண்டாயோ ???

என் சித்தம் எல்லாம் நிறைந்தவளை நீயும்தான் கண்டாயோ ???

விண்மீன்களை விழிகளாக கொண்டவளை கண்டாயோ ???

எனையன்றி பிறர் தொட்டால் மரித்துவிடும் குணம்கொண்ட செங்கதிரை கண்டாயோ ???



என் மனமே என் மனமே என்னவளை கண்டாயோ ???

வெள்ளை மனம் கொண்ட என் தேவதையை கண்டாயோ  ???

என் விழி மூடாமல் உலகமெலாம் தேடுகிறேன் என் காதலியை கண்டாயோ ???




கெண்டையின் கொண்டையிலே அரளி பூவ வெச்சதாறு ?????

வெண்ணிலா மூஞ்சியில மீசயதான் வரஞ்சதாறு ??????

சிறு சட்டி தூக்கமுடியாம அதுநொருங்க போட்டவளே ,

கருவாடு மூட்டபோல இத தூக்கி போறதெங்கே ???????

பள்ளிபடிப்பு மண்டையிலே ஏறுமுன்னே

கூன்விழுந்த கிளவிபோல ஆனதென்ன ????

வெடயில்லா கேள்வி எல்லாம் கேக்குரானுங்களே

இந்த சோதனைக்கு தீர்வு காணுற நாளும் எப்போ ????







மனைவியின் மரணத்தை தாளாத கணவனின் புலம்பல்களாக .....!




ஜிலேபி கொண்டைபோட்டு என் மனச கெடுத்தவளே,

வாய் மணக்க கருவாட்டுகொழம்பு வெச்சு என் வயித்த நிறச்சவளே,

தினம் புதுராகம் பாடி என் காதில் இனிச்சவளே,

நித்தம் என அணைச்சு ரெண்டுபுள்ள பெத்தவளே,

சிற்றெறும்பு கடிச்சாலும் அது குலம் அழிய வேண்டி நின்னேன் .....!

செங்கரையான் உன்னை அறிக்க அதைகேட்டு நானும் நிக்குறேனே,

என் உலகம் விட்டுவிட்டு மண்ணுலகம் போனவளே,

மறுஜென்மம் நீ எடுத்து மீண்டு வாடி என் கருங்குயிலே,

நீ பெத்த புள்ள ரெண்டும் வீதியிலே வாடுதடி,

அத கூட பாக்காம கண்ணு ரெண்டும் மூடுனியே

பச்சை மரம் எரியுதடி பாவிமக போனதால,

உன்ன விட்டு நானா வாழ என்ன  பாவம் செஞ்சேனோ ????????

நானும் வாரேன் உன்கூட போய்விடுவோம் மேல்லோகம் .............!









 இறந்த உடலங்களின்

கதறல்களோ??

ஏழைகளின் புலம்பல் .............!



விண்ணை கடக்கும் பெண்ணே

என்னை
கடக்க
மட்டும்
ஏன்
இந்த
தயக்கம் ???


என் மீது உள்ள காதலா ??

உன் அண்ணனின் காவலா ???





நீல நிற

மீன்களை

சுற்றி

கருப்பு வளையங்கள்

"  கண்களை சுற்றி அவள் இட்ட மை "

















உனது

அகராதியில்

புதுமை

என்பது

ஆடைகளை

குறைப்பதுவா ???



அரைகுறையாய்

மெழுகு சிலை .............!










வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் நுரையீரல்
அறுக்க வருகின்றன
நுண்உயிரிகள்.....


வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் வாயிலாக மக்களை
பழிவாங்க வருகின்றன
விஷகிருமிகள் ......

வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் நரம்பறுக்க
வருகின்றனர்
நரகசூரர்கள் ........


வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
ஓஜோனை
மட்டுமல்ல உன்னையும்
ஓட்டையாக்கி விடுவர் ஜாக்கிரதை ..........


வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் புலன் கெடுக்க உண்டு பலர்
நலன் காக்க விரும்புவோர் சிலரே .....


ஓடவேண்டாம் காற்றே
நில் .......!

உன் மிச்ச நுரையீரல்
காக்க
ஒரு யோசனை .....!


முகமூடி
அணிந்துகொள் ......


அந்தரத்தில்
மிதக்கட்டும்
முகமூடிகள் ....


ஓடவேண்டாம் காற்றே
நில் .......!

நீ
இறந்து
உலகை
இறக்கவிடு ........


எந்திர வாழ்கையில்
இயற்கை எழிலை
காக்காமல்
கருக்கும்
மனித இனம்
அழியட்டும் .........


உன்னத வாழ்வை
உணராமல்
பிறர் உணர்வில்
சுயநலம் காணும்
மனித இனம்
அழியட்டும் .....


நல்லோர்
சிலர் போதும்
உனக்கு.....


நோயற்ற வாழ்வை உருவாக்கு ...
இயற்கை எழிலை வியந்துபாடு ...


சுயநலம் என்னும்
பகைவனை
அழித்து


சாதிமதம் இல்லாத
சமத்துவ வாழ்வை
வரவேற்று
மகிழ் ..........


"அன்பு" என்னும் விதையை விதைத்து .....

"இயலாமை" என்னும் களையை எடுத்து .....

"புது உலகம்" என்ற பயிரை அறுவடை செய் ..........!






Tuesday 29 May 2012






ஊர் உறங்கும்

மையிருட்டு வேளையிலே

மனம் என்னும்

ஊமை நாயகனின்

கூக்குரல் நாடகம்

"கனவுகள் "



Monday 21 May 2012




இறுதி உயிர் இறுதி பெரும் வரை

உயிர்கொண்டு வாழும்

ஒரு உயிர் இயற்கை .........

மடியபோவது மட்டும் மனிதன் ...........!
 — 




நீ கலைத்து விட்ட கூந்தல்

இன்று வானம் மூடிய முகிலாகி

என் உயிர் வளர்க்கும் அமுதாகி

நனைக்கிறது

என் உடலை ................!









கண்ணில் கவிபாடும் கருத்தவிழி காரிகையே

உன்னை துதிபாட என்ன தமிழ்நான் கொணர்வேன் .........

உன் சின்ன இதழ் சிரிப்பினிலே என் துன்பம் எல்லாம் தான் பறக்க

சிறு உதவி செய்தே உயிர் காப்பாய் என் அழகே ............!




Thursday 17 May 2012





நெஞ்சருத்த நினைவை எல்லாம்



பெருவகிடாய் வாங்கிக்கொண்டு



தீராத சோகம் தன்னை தீர்த்திடவே



எண்ணி நின்றபடி தவம் செய்யுதோ


இந்த "சுமைதாங்கி "






உயிர்வலிக்கும் பொழுதுகளில் எனக்கு மருந்தானதும் உன் நினைவுகள் தான் .....


இன்று என்னை உன்னை விட்டு நெடுந்தூரம் நடக்க செய்ததும் உன் நினைவுகள் தான் .....

உருவம் அழித்து என் உயிரை உடன் அழைத்து சென்றதும் உன் நினைவுகள் தான் ....





Wednesday 16 May 2012




உன் மனம் தரித்த வெள்ளுடயால்


வெளுக்கபட்டன ஏழைகளின்


"கருப்பு சரித்திரங்கள் "













முல்லை மலர் தேரேனிலே

பயணம் செய்யும்

கருப்பு நிலா

"கருவண்டு"













வானம் எனக்கு ஒரு போதை மரம்


தினம் உன் நினைவுகளை பரப்பி



தத்தளிக்க விடுவதால் ..........!  




















நேர்கோடு நீ எடுத்து பிரித்து காட்டிய

நேர்வகிடு கணிதத்திற்கு

கிடைத்த முதல் வெற்றி ..........














புண்பட்ட மனம் இன்று புது கவிதை பாடுதம்மா,

நெஞ்சுணர்ந்த சிறுவலி தான் பெருந்துயரம் ஆனதம்மா,

தினம் கண்ட சூரியனும் சரிபாதி உடயுதம்மா,

கண்டறிந்த கருத்து எல்லாம் உதவாமல் போனதம்மா,

நிழல் கொண்ட உருவம் எல்லாம் நிழலாக

மெய்கீர்த்தி கூட இன்று பொய்கீர்த்தி  ஆனதம்மா,

பிறர் கொண்ட சுமை எல்லாம் சுமைதாங்கி தாங்கிடுமே

சுமைதாங்கி கொண்ட சுமை தூக்க யார் வருவார்???????








Tuesday 8 May 2012




என்னுள் கருத்தரித்த

முதல் குழந்தை ,

உனக்காக நான்

எழுதிய முதல் கவிதை ...........!




உங்கள் அன்பு

நண்பன் மனோ .......



நடைபயிலும்


குழந்தை போல


தள்ளாடி நடக்கிறேன்


உன் நிழலுக்கு துணையாக .............






Saturday 5 May 2012




செந்தமிழின் வன்மையினால்
என்னவளை பாடிடுவேன் .....

சிறுபிள்ளை சிரிப்பினிலே
அவளுடன்தான் பேசிடுவேன் ....

ஆ வின் மடி தூய்மையை போல்
திருமகளை வாழ்த்திடுவேன் ......

மென்மை இதழ் மலர்கள் கொண்டு
அவள் பாதத்தை பூஜிபபேன் ........

எழுந்து வர சொல்லுங்கள்
யாரேனும் ஒருமுறை
அவளை கல்லறையில் இருந்து .........