Monday 28 November 2016

கண்களில் கனவுகள் நிறைத்திடல் வேண்டும்
இடைவெளி குறைத்திட்ட நட்பொன்று வேண்டும்
உறவினில் உண்மையை உணர்த்திடல் வேண்டும்
மனதினில் நம்பிக்கை விதைத்திடல்  வேண்டும்
கவிதையாய்  கைகளில் இணைந்திடல் வேண்டும்
திருமண சுகத்தினில் திளைத்திடல்  வேண்டும்
துயரங்கள் நிறைகையில் துளிர்த்திடல் வேண்டும்
வெறுமைகள் சூழ்கையில்  தாங்கிட வேண்டும்
காதலுக்கு அப்பால் வெகுதூரம் வேண்டும்
என் நிறைந்து போன நினைவுகளில் நீ வழிந்தோட வேண்டும்
ஏழிசை ராகங்கள்  வாழ்த்து பாடிட
பூரணம் நிறைந்து போன
மரணம் ஒன்று வேண்டும் .....!

வேண்டுதல்களுடன்
உங்கள்
தமிழ் மனோ




Friday 4 November 2016










என்
தமிழை 
நான் 
எழுத 
வார்த்தை 
பஞ்சம் 
ஆனதிலே

கற்பனையில் 
கவிதை வரி தொடுக்க 
உள்ளத்துக்கு வரி  
கொடுத்து

சூழ்நிலையின் 
சூறாவளி 
சுழன்றடிக்கும் 
வேளையிலே 

உருண்டைப்பானை 
உள்ளினிலே 
சிறு நீர் போல் 

வற்றும் நிலை 
கற்பனையில் 
கல்லிட்டு 
தாகம் 
தீர்க்க 
போராடும் 
" காகம் " 
நான் .... ! 




என்றும் அன்புடன் 
உங்கள் 
தமிழ் மனோ 




கண்களுக்குள்
கவி படைத்த
கலைஞனின்
கற்பனைக்கு
தமிழ் எழுதும்
கைகள் எல்லாம்
கவி எழுதுமே ......

மையமிட்டு
அமர்ந்திருக்கும்
குங்குமத்தின்
நிலையினிலே
என் மனம்
அமர்ந்து

நெடுந்தவத்தின்
ஒரு முடிவாய்
வந்து உதித்து  
நிறைகிறது
இந்த வரிகள் ...

கற்பனை
குழந்தைகளாய்
கவிதைகளை
பெற்றெடுக்க
சூல்
கொள்ளவேண்டும் என்ற
நெடுநாளின்
கனவில் இன்று
வறண்டுபோன
விளைநிலத்தில்
சிறுதுளியை
விதைக்கிறது
இந்த கண்கள்
என்னும்
மாயவிசை .....