Tuesday 2 October 2012
நீ விழித்து
இருந்தநேரம் கூட
எங்கள்
இல்லத்தில்
குறைந்தது இல்லை
இருந்தநேரம் கூட
எங்கள்
இல்லத்தில்
குறைந்தது இல்லை
சிரிப்பு சத்தம் ......
வார இறுதி தமிழுக்காக
காலை முதல் இடம் பிடித்த
வீட்டு திண்ணை
மறந்து போனோம் ...
தமிழுடனே பயணிக்க
வேர்கடலை படகேறி
பயணம் தொடர்ந்து
வெற்றி கண்ட
நிமிடங்கள்
மறந்து போனோம் ........
சண்ட வந்து பிரிஞ்ச
போதும் அந்த தமிழ் காண
கூட்டுசேரும்
நண்பர்களை
கண்களிலே மறந்து போனோம் .......
கலர் கலரா கனவில்
வரும் அன்று பார்த்த
"வெள்ளை படம் "
கூடி இருந்து பார்த்த படம்
மறந்து போகும்
போனாலும்
பார்த்த நொடி பசுமையிலே
காலமெல்லாம்
செழித்திருக்கும் .....
தேர்ந்த சில நிகழ்ச்சியினை
பண்டிகையில் கண்டு விட்டால்
திரண்டு வரும் வெள்ளம்
போல ஊற்றெடுக்கும்
உற்சாகம்.....
அம்மா கையில் நெய் முறுக்கு
வாங்கிதின்ன போர் தொடுப்போம்
அப்பா வந்து மிரட்டயிலே
முந்தானை கவசமேர்ப்போம் ...
தமிழ் இல்லா நேரம் எல்லாம்
தன் பழைய கதை சொல்லும் போது
அப்பா விடும் பெருமூச்சு
கூடி நிற்கும் துன்பம் எல்லாம்
தூரபோகும் தூசாக .....
அன்று வாரி அணைக்க காலன் வந்தாலும்
விரட்டி அடிக்க சொந்தம் உண்டு
அன்று எந்த துன்பம் வந்த போதும்
சொல்லி அழ அன்னை மடி கண்டோம்
ஆற்றுதல் பெற தந்தை தோள் கொண்டோம் .....
இன்று சொல்லி அழ தாய் இல்லை
அவள் சேர்ந்துவிட்டால் கற்பனை "காவிரி " யின்
இறுதிசடங்கில் ...... சம்பளம் இல்லா துணை நடிகையாக
தோள் தேட தந்தை இல்லை அவர்
இறங்கிவிட்டார் சுரணை இல்லா
அரசியல் பேச்சு தொகுப்புகளில்
தாத்தாவின் கண்ணாடி மறைத்து
களவு பழக நேரம் இல்லை குழந்தைக்கு
கை கொடுக்க காத்து
இருக்கிறான் குழந்தை பீமன்
இரண்டு வண்ணம்
நீ கொடுத்த போதும்
அன்பு வண்ணம்
மாறாமல் சொந்தம்
கொண்ட குடும்பம்
எல்லாம்
இன்று
நோய் வந்த
கோழி போலே
முடங்கி கிடக்கு
வீட்டுக்குள்ளே ....
வீட்டுக்குள்ளே அன்பும் இல்லே
நெஞ்சுக்குள்ளே பாசம் இல்லே
அரவணைக்க ஆளும் இல்லே
அரிதாரம் பூசிய
வானரங்கள் கூத்தடிக்க
பலவண்ணம் நீ கொடுத்த
போதும்
வாழ்வின் வண்ணம்
நிலைக்களையே ....
வண்ணம் எல்லாம்
மாறிபோச்சு அதோட
வாழ்க சேர்ந்து
வாடிபோச்சு
சேர்த்து வெச்ச
பாசம் எல்லாம்
கனவினிலே
கரஞ்சுபோச்சு
கூடி வாழ்ந்த காலம்
எல்லாம் நிகழ்
காலத்துல
நிழலாக
மாறிடவே ,
மாறிவிட்ட காலத்துல
தாரத்தை இன்னொருவனுக்கு
மணமுடிக்கும் மணவாளன் ....
தன் தாய்க்கு
மனம் செய்து வைக்கும்
பாக்கியவான்கள்
பிள்ளைகள் .....
நெஞ்செங்கும்
விஷம் பரப்பும்
நோய்கிருமி
வாழுமிடம்
"வண்ண தொலைகாட்சிபெட்டி"
இரண்டு வண்ணம் தந்த போதும்
அன்பு மொழி உடனே
தென்றலெனும் புதுமை
வந்து கதவு திறக்க
வழி தந்த முதல் முற்றம்
"கருப்பு வெள்ளை தொலைகாட்சிபெட்டி "
வார இறுதி தமிழுக்காக
காலை முதல் இடம் பிடித்த
வீட்டு திண்ணை
மறந்து போனோம் ...
தமிழுடனே பயணிக்க
வேர்கடலை படகேறி
பயணம் தொடர்ந்து
வெற்றி கண்ட
நிமிடங்கள்
மறந்து போனோம் ........
சண்ட வந்து பிரிஞ்ச
போதும் அந்த தமிழ் காண
கூட்டுசேரும்
நண்பர்களை
கண்களிலே மறந்து போனோம் .......
கலர் கலரா கனவில்
வரும் அன்று பார்த்த
"வெள்ளை படம் "
கூடி இருந்து பார்த்த படம்
மறந்து போகும்
போனாலும்
பார்த்த நொடி பசுமையிலே
காலமெல்லாம்
செழித்திருக்கும் .....
தேர்ந்த சில நிகழ்ச்சியினை
பண்டிகையில் கண்டு விட்டால்
திரண்டு வரும் வெள்ளம்
போல ஊற்றெடுக்கும்
உற்சாகம்.....
அம்மா கையில் நெய் முறுக்கு
வாங்கிதின்ன போர் தொடுப்போம்
அப்பா வந்து மிரட்டயிலே
முந்தானை கவசமேர்ப்போம் ...
தமிழ் இல்லா நேரம் எல்லாம்
தன் பழைய கதை சொல்லும் போது
அப்பா விடும் பெருமூச்சு
கூடி நிற்கும் துன்பம் எல்லாம்
தூரபோகும் தூசாக .....
அன்று வாரி அணைக்க காலன் வந்தாலும்
விரட்டி அடிக்க சொந்தம் உண்டு
அன்று எந்த துன்பம் வந்த போதும்
சொல்லி அழ அன்னை மடி கண்டோம்
ஆற்றுதல் பெற தந்தை தோள் கொண்டோம் .....
இன்று சொல்லி அழ தாய் இல்லை
அவள் சேர்ந்துவிட்டால் கற்பனை "காவிரி " யின்
இறுதிசடங்கில் ...... சம்பளம் இல்லா துணை நடிகையாக
தோள் தேட தந்தை இல்லை அவர்
இறங்கிவிட்டார் சுரணை இல்லா
அரசியல் பேச்சு தொகுப்புகளில்
தாத்தாவின் கண்ணாடி மறைத்து
களவு பழக நேரம் இல்லை குழந்தைக்கு
கை கொடுக்க காத்து
இருக்கிறான் குழந்தை பீமன்
இரண்டு வண்ணம்
நீ கொடுத்த போதும்
அன்பு வண்ணம்
மாறாமல் சொந்தம்
கொண்ட குடும்பம்
எல்லாம்
இன்று
நோய் வந்த
கோழி போலே
முடங்கி கிடக்கு
வீட்டுக்குள்ளே ....
வீட்டுக்குள்ளே அன்பும் இல்லே
நெஞ்சுக்குள்ளே பாசம் இல்லே
அரவணைக்க ஆளும் இல்லே
அரிதாரம் பூசிய
வானரங்கள் கூத்தடிக்க
பலவண்ணம் நீ கொடுத்த
போதும்
வாழ்வின் வண்ணம்
நிலைக்களையே ....
வண்ணம் எல்லாம்
மாறிபோச்சு அதோட
வாழ்க சேர்ந்து
வாடிபோச்சு
சேர்த்து வெச்ச
பாசம் எல்லாம்
கனவினிலே
கரஞ்சுபோச்சு
கூடி வாழ்ந்த காலம்
எல்லாம் நிகழ்
காலத்துல
நிழலாக
மாறிடவே ,
மாறிவிட்ட காலத்துல
தாரத்தை இன்னொருவனுக்கு
மணமுடிக்கும் மணவாளன் ....
தன் தாய்க்கு
மனம் செய்து வைக்கும்
பாக்கியவான்கள்
பிள்ளைகள் .....
நெஞ்செங்கும்
விஷம் பரப்பும்
நோய்கிருமி
வாழுமிடம்
"வண்ண தொலைகாட்சிபெட்டி"
இரண்டு வண்ணம் தந்த போதும்
அன்பு மொழி உடனே
தென்றலெனும் புதுமை
வந்து கதவு திறக்க
வழி தந்த முதல் முற்றம்
"கருப்பு வெள்ளை தொலைகாட்சிபெட்டி "
Subscribe to:
Posts (Atom)