படச்சவந்தான் எவனுமில்ல
வாழ வழி காட்டியதும் எவனுமில்ல
திறந்து கிடக்கும் வானத்திலே
சிறு மேகம் நான்தானே ........
பூட்டி வைக்காத பூமியிலே
புது மலரும் நான்தானே .......
காத்து கூட பேசிக்கிட்டே
மனம் மயங்குற பயநானே .......
வெள்ளாம வெலஞ்சதுனா
மைனர் கூட நான்தானே .....
சின்ன பொட்டிக்குள்ள காத்து போல
என் நெஞ்சுக்குள்ள சேர்ந்து நிக்கும்
நியாபகம் எல்லாம் வெற்றிடந்தான் .......
இந்த பூமி ஏய்க்காது
வானமது பொய்க்காது
என் ஒடம்பு விழுந்துச்சுன்னா
ஆறடி நிலம் போதும்....
கண்ணீர் மடை தொறக்க
காக்கா குருவி கூட்டம் இருக்கு.....,
என் சாவு வரும் போது
நான் குளிப்பேன் பன்னீரில ........
என் சந்ததி வருத்தப்பட
நான் இல்ல காரணமா .........
பெரும்பொலப்பு பொழைக்க வைக்க
நான் சேர்த்த தேவை இல்ல வெறும் பணத்த....
நான் போன பின்னாடி எவன் எப்படி
இருப்பானோ தெரியாது .....
அவன் வாழ வழி இருந்தா
பொழைக்கட்டும் பூமியிலே ..........
வந்த வழி மறந்துபோக
நன்றிகெட்ட மனுசனும் நான் இல்ல ..........
தப்பு செய்ய வெச்சு தண்டிக்கிற
இல்லாத கடவுளும் நான் இல்ல ..................!
மொதல் மண்ணுமேல வந்து விழுந்த
சிறு பூச்சி நாந்தானே .............!