எனக்கும் உண்டு பேராசை .........
தலை நரைக்காத காற்று,
திரை விலக்காத வானம்,
மலை பொய்க்காத மேகம்,
விதை கெடுக்காத பூமி,
அமிலம் தீண்டாத நீர்,
புனிதம் தொலைக்காத மனிதம்,
கலப்பு இல்லாத தமிழ்,
கனவு தொலையாத உறக்கம்,
பருவம் தொலைக்காத காதல்,
நம்பிக்கை தேயாத நட்பு,
அழுகை தீண்டாத தாய்மை,
திறமை குலையாத தொழில்,
குணம் கெடுக்காத செல்வம்,
சுயம் தொலைக்காத கொள்கை,
கொடுக்கும் கை தாளாத தானம் ,
பிறவி காணாத புது உலகம்,
தன்னிலை மறவாத தமிழர் மானம்.
யாவும் கண்டபின்,
உலகின் மக்களுக்கும், இயற்கைக்கும் ,
தார்மீக சொந்தமாக மாற வேண்டும் .
ஆனபின்,
விழிமூடி நல்லுலகம் சேர வேண்டும் ,
பிறர் எனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் ,
பிறந்து வந்த நற்பயனை அடைய வேண்டும் .............!