Monday 9 July 2012




இரவென்று விடியும் என்று

விளிமருகும் கண்களே,

கனவென்று பலிக்கும் என்று நிஜத்தில்

எறியும் விழிகளே,

தனக்கு இரவென்றும் விடியாது என்றுதெரிந்தும்

முதுகில் நம்பிக்கை விளக்கை எரியவிட்டு பகலாக்கும் மின்மினி

பூச்சியின் காலடியில் தவம் கிடப்போம்

குலம் வீழ்ந்த இடம் சகதி என்று தெரிந்தும் சகதியின்

கருவறையில் காலூன்றி சுகந்தம் பரப்பும்

தாமரையின் நீர் பருகுவோம் .............

உனக்கு சிரம் தாளாத கனவுகளை

நம்பிக்கை கூண்டில் நிற்க வைத்து வெற்றி கொள்வோம் ..........



Friday 6 July 2012




கண்ணெதிரே கருவருத்தால் கண்மூடும் குருடர்கள்,

உருளை கல் கண்டால் பொட்டு வைத்து பூ முடிப்பர் ....


இவர் உடுத்த கோவணம் இல்லை

கற்பனைக்கு பட்டுடுத்தி பூரிக்கின்றார் ..............


காவிகண்ட இடத்தில் எல்லாம் இவன் கன்னத்தை கலவரபடுத்தி

அதை பக்தி என்கிறான் ....


ஊண் இன்றி  வீதியில் உலவும் மனிதனை விடுத்து தொந்தி நிரப்பி

புண்ணியத்தை வசபடுத்த அலைபவனை அரவணைக்கிறான் ...........


அற்ப காக்கை கூட கூடி வாழ்ந்து சிறகடிக்கும் போது ...

ஆறறிவு அக்றிணை

மட்டும்

சுயநல சேற்றில் சிக்கி

உழல்வது ஏன் ????