உன் துன்பத்தை எதிர்கொள்ள நான் இருக்கிறேன்,
உன் களம் வெல்ல நான் இருக்கிறேன்,
உன் லட்சியம் வெல்ல நான் இருக்கிறேன்,
உன் பகை வெல்ல நான் இருக்கிறேன்,
உன் வாழ்வு செழிக்க நான் இருக்கிறேன் ,
என் வழி செல்லும் பாதசாரியாக
மட்டும் நீ
இரு
வெற்றி உன்
பின்னால் வரும்
இப்படிக்கு
உழைப்பு ........