Monday 28 November 2016

கண்களில் கனவுகள் நிறைத்திடல் வேண்டும்
இடைவெளி குறைத்திட்ட நட்பொன்று வேண்டும்
உறவினில் உண்மையை உணர்த்திடல் வேண்டும்
மனதினில் நம்பிக்கை விதைத்திடல்  வேண்டும்
கவிதையாய்  கைகளில் இணைந்திடல் வேண்டும்
திருமண சுகத்தினில் திளைத்திடல்  வேண்டும்
துயரங்கள் நிறைகையில் துளிர்த்திடல் வேண்டும்
வெறுமைகள் சூழ்கையில்  தாங்கிட வேண்டும்
காதலுக்கு அப்பால் வெகுதூரம் வேண்டும்
என் நிறைந்து போன நினைவுகளில் நீ வழிந்தோட வேண்டும்
ஏழிசை ராகங்கள்  வாழ்த்து பாடிட
பூரணம் நிறைந்து போன
மரணம் ஒன்று வேண்டும் .....!

வேண்டுதல்களுடன்
உங்கள்
தமிழ் மனோ




No comments:

Post a Comment