Friday 4 November 2016



கண்களுக்குள்
கவி படைத்த
கலைஞனின்
கற்பனைக்கு
தமிழ் எழுதும்
கைகள் எல்லாம்
கவி எழுதுமே ......

மையமிட்டு
அமர்ந்திருக்கும்
குங்குமத்தின்
நிலையினிலே
என் மனம்
அமர்ந்து

நெடுந்தவத்தின்
ஒரு முடிவாய்
வந்து உதித்து  
நிறைகிறது
இந்த வரிகள் ...

கற்பனை
குழந்தைகளாய்
கவிதைகளை
பெற்றெடுக்க
சூல்
கொள்ளவேண்டும் என்ற
நெடுநாளின்
கனவில் இன்று
வறண்டுபோன
விளைநிலத்தில்
சிறுதுளியை
விதைக்கிறது
இந்த கண்கள்
என்னும்
மாயவிசை .....




No comments:

Post a Comment