பெண்
என்று
பிறந்ததினால்
உலகுபடைக்கும்
பேரு பெற்றாய்
இயற்கையின்
மறுபிறப்பாய்
மனிதர்களுக்கு
அமுது கொடுத்தாய்
உலகுன்ன
உடல் உழைத்து
தேய்ந்து போன
நெஞ்சம்தனிலும்
வற்றாத பெருங்கடலை
அன்பு கொண்டு
ஆளுகின்றாய்
மெல்லிய மனம்
கொண்டும் துயர் கண்டு
துவளாமல்
சிகரம் தோற்க
எழுந்து நின்றாய்
உணதாற்றல் இல்லை
என்றால் எழுகடலுக்கும்
ஆற்றல் இல்லை
ஆர்பரிக்கும்
அன்பினாலே உயர்ந்து
நிற்கும் பெண் இனமே
உங்கள் காலடியில்
எங்கள்
"இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் "
No comments:
Post a Comment