நெஞ்செல்லாம்
வெறியேற
ரத்த நாளமெல்லாம்
சூடேற
களம் புகுமே
சூறாவளி
துகிலுரித்த
மிருகம் தன்னின்
உடல் கிழித்து
வஞ்சகரின்
தலையறுத்து
தமிழ் தாயின்
மனம் குளிர
செய்யும் ஒரு
நாளும் வருமே ...
பெண்டிர் எல்லாம்
மென்மை என்று
புகழ் பரப்பும் ஏடுகள்
கூட இனி
பகை முடிக்கும்
ஆற்றல என்று
சரித்திரத்தில்
வடித்திடுமே ....
கண்ணயர்ந்த
பூக்களின் தேகம் எல்லாம்
புது வடிவாய் பெற்று
வந்து எதிரி தனை
வீழ்த்த வேண்டி
புது
உதிரம்
கொண்டெளுமே...
அன்றெங்கள்
உடல் குலுங்க
அழுதிடுவோம்
மன்னன்
அவன் மடிசாய்ந்து ...........
அதுவரையில்
தடை விதிப்போம்
கண்களுக்கு
கண்ணீர் வழியே
சீற்றம் குறைக்க
கூடாது
என்று ...
No comments:
Post a Comment